1936 அக்டோபர் 26-ல் ‘மாத்ருபூமி’ வார இதழ் இந்தக் கட்டுரையை வெளியிட்டபோது, இ.எம்.எஸ். அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்டாக ஆகியிருக்கவில்லை. பி.சுந்தரய்யா, எஸ்.வி. காட்டே ஆகியோரின் இடைவிடாத தலையீட்டின் பலனாக கே. தாமோதரன், என்.சி. சேகர், பி. கிருஷ்ணப்பிள்ளை, இ.எம்.எஸ். ஆகியோர் சேர்ந்து 1937-ல் தான் கம்யூனிஸ்ட் குழுவை உருவாக்கினர். பிற்காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வழிகாட்டியாகத் திகழ்ந்த இ.எம்.எஸ்-ன் அறிவுக் கூர்மை எத்தனை எதார்த்தமாகவும், நுட்பமாகவும் இருந்தது என்பதற்கான வெளிப்படைச் சான்றுதான் “சோஷலிசமே உலகின் ஒரே பாதுகாவலன்” என்று முழங்குகின்ற இந்தக் கட்டுரை. 1930களின் முற்பகுதி முதல் அறுபதுகளின் இறுதிக்காலம் வரை கேரளத்தின் கூட்டுவிவாத அரங்குகளை ஒளிவீசச் செய்த ஓர் அறிஞரின் ஆரம்ப கால வெளிச்சங்களை இங்கே காணலாம்.
Podchaser is the ultimate destination for podcast data, search, and discovery. Learn More